திங்கள், 9 ஜனவரி, 2012

இவனிடம் அன்பு கொண்டு எவரும் அழிந்து போவதில்லை...

இவன் எதிர்ப்புகளை எதிர்கொண்டவன்...."பாறைகளை எதிர்க்கவில்லையேல் ஓடைகளுக்குச்சங்கீதமில்லை" என புரிந்தவன்...
இவன் துயரங்களை ஜீரணித்தவன்..."வெயிலை ஜீரணிப்பதால்தான் மரங்கள்நிழல் தருகின்றன" என புதுமொழி கூறியவன்...
மற்றவரின் உதட்டசைவிற்கும் உள்ளத்தசைவிற்கும்பொருள் புரிந்தவன்...
வார்த்தைகளினாலேயே வசியப்படுத்தும்வசியக்காரன்...
இவனும் ஒரு தேசிங்கு ராஜன்...மனம் என்னும் மாய பஞ்சகல்யாணி குதிரையைஅடக்கும் ஆற்றல் பெற்றிருப்பதால்...
உதிர்ந்த பூக்களையும் தன் கால்கள் படாமல்தாண்டிச்செல்லும் இளகிய மனம் படைத்தவன்...
சிறகுகள் அடித்து பறவைகள் செத்துப் போவதில்லை...இவனிடம் நட்பு கொண்ட எவரும் வீழ்ந்து போவதில்லை...
அலைகள் அடித்து கடற்பரப்பு காயப்படுவதில்லை...
இவனிடம் அன்பு கொண்டு எவரும் அழிந்து போவதில்லை...
அறிவு மட்டும் கொண்ட ஆண்கள்உலர்ந்த பனையோலையில் எழுதிய கவிதைகள்...
அழகு மட்டும் கொண்ட ஆண்கள்நிறம் மணமில்லா மலர்கள்..................
இவன் மட்டும்தான்"அழகிய மலரில் எழுதிய கவிதை..."
ஆம்...!!! இவன் மலரில் எழுதிய கவிதை...!!!

2 கருத்துகள்: